search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கெஜ்ரிவால் போராட்டம்"

    டெல்லி கவர்னர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதற்கான அனுமதி அளித்தது யார்? என டெல்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. #DelhiHC #Kejriwal
    புதுடெல்லி:

    டெல்லியில் அரசு தலைமை செயலாளர் அன்ஷு பிரசாத் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 4 மாதங்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பகுதிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மந்திரிகளை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும் துணைநிலை கவர்னர் அனில் பைஜாலை கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து மந்திரிகளை புறக்கணிக்கின்றனர்.

    இந்த நிலையில் துணைநிலை கவர்னர் பைஜாலை கடந்த 11-ந் தேதி மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும், ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.

    பின்னர் கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.

    டெல்லி கவர்னர் மாளிகையில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் 3 மந்திரிகள் கடந்த ஒருவார காலமாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர குமார் ஜெயின் உடல்நிலை நேற்றிரவு மோசமடைந்ததால் அங்கிருந்து அகற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



    இந்நிலையில், டெல்லி அரசுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க மறுப்பது தொடர்பாக அரசின் சார்பிலும், கெஜ்ரிவால் நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக தனிநபரின் சார்பிலும் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே.சாவ்லா, நவீண் சாவ்லா முன்னர் இன்று விசாரணைக்கு வந்தபோது, டெல்லி கவர்னர் மாளிகையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இதற்கான அனுமதி அளித்தது யார்? என டெல்லி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

    தர்ணா போராட்டம் நடத்த உங்களுக்கு அதிகாரம் அளித்தது யார்? நீங்கள் கவர்னரின் அலுவலகத்துக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறீர்கள். போராட்டம் என்றால் அது கவர்னர் அலுவலகத்துக்கு வெளியேதான் நடத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

    இதற்கிடையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் உள்ளிருப்பு போராட்டம் தொடர்பாக டெல்லி சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜேந்திர குப்தா, இன்று டெல்லி ஐகோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் இந்த வழக்குகளில் எல்லாம் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தையும் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி, மறுவிசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.  #DelhiHC #Kejriwal

    நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்பதில் துளியும் உண்மை இல்லை. அரசியலுக்காக நாங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறோம் என ஐஏஎஸ் சங்கத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். #KejriwalProtest #IASOfficersAssociation
    புதுடெல்லி:

    டெல்லி கவர்னர் அலுவலகத்தில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் 3 டெல்லி அமைச்சர்களும் உள்ளனர். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

    இதற்கிடையில், தலைநக்ர் டெல்லியில் இன்று மாலை ஆம் ஆத்மி மந்திரிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் என அனைவரும் ஒன்று திரண்டனர். அவர்கள் அனைவரும் பிரதமர் மோடி வீட்டுக்கு பிரமாண்ட பேரணியாக சென்றனர். 

    இந்நிலையில், டெல்லியில் உள்ள ஐஏஎஸ் சங்க உறுப்பினர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:



    நாங்கள் வேலை நிறுத்தம் செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்துள்ளார்கள் என்ற செய்தியே முதலில் தவறானது, அடிப்படையற்றது.

    அனைத்து துறைகளும் அவர்களுடைய பணிகளை செய்கிறது. நாங்கள் சில நேரங்களில் விடுமுறை நாட்களில் கூட வேலை செய்கிறோம்.

    எங்களுடைய பணியை நாங்கள் செய்து வருகிறோம். இதுபோன்ற செய்திகளால் நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளோம், அரசியல் காரணத்திற்காக எங்களை பயன்படுத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளனர். #KejriwalProtest #IASOfficersAssociation
    டெல்லி கவர்னர் அலுவகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்து ஆம் ஆத்மி கட்சியினர் பிரதமர் வீடு நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தினர். #AAPmarch #PMresidence
    புதுடெல்லி: 

    டெல்லி கவர்னர் அலுவலகத்தில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் 3 டெல்லி அமைச்சர்களும் உள்ளனர். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

    இதற்கிடையில், இவ்விவகாரத்தில் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவரது இல்லம் நோக்கி இன்று பேரணியாக புறப்பட்டு செல்வோம் என ஆம் ஆத்மி தேசிய பொதுச் செயலாளர் பங்கஜ் குப்தா நேற்று அழைப்பு விடுத்திருந்தார். 



    இந்நிலையில், தலைநக்ர் டெல்லியில் இன்று மாலை ஆம் ஆத்மி மந்திரிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் என அனைவரும் ஒன்று திரண்டனர். அவர்கள் அனைவரும் பிரதமர் மோடி வீட்டுக்கு பிரமாண்ட பேரணியாக சென்றனர். 

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், ஆம் ஆத்மி பேரணிக்கு அனுமதி அளிக்கவில்லை. பேரணியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என தெரிவித்தனர்.

    ஆம் ஆத்மி பேரணி நடைபெறுவதை முன்னிட்டு, டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க், பட்டேல் சவுக், மத்திய தலைமை செயலகம், உத்யோக் பவன் மற்றும் ஜன்பத் ஆகிய ரெயில் நிலையங்களின் இரு வாயில்களும் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #AAPmarch #PMresidence
    ×